Skip to main content

மொபைலால் ஆபத்து வரங்களே சாபமாக மாறுவதுதான் மிஞ்சும் mobile danger health tips Ezhilarasan


நண்பர்களே, இன்றய ..16-09-2018 ....தி இந்து.. நியூஸ் போப்பரில் நான் பல மாதங்களாக சமுதாயத்தின் மேல் உள்ள அக்கறையில்  பலரிடம் நான் புலம்பிய  ஒரு விஷயத்தை இந்த ஆண்டிற்கான அவர்களுடைய ... "ஃபோக்ஸ். பாயிண்டாக" ...மையக் கருவாக அந்த நாளிதழ் எடுத்து உள்ளது எனக்கு ஒரு சிறிய மகிழ்ச்சியை கொடுத்தது.

எழிலரசன் வெங்கடாசலம்


=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=

இதோ அதில் இருந்து ...

தமிழ் திசை ~16.09.2018 (ஞாயிறு)  நாளிதழில் இருந்து ... அன்பிற்கினிய வாசகர்களே,

உங்கள் அன்பு, ஆதரவுடன் ஆறாம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது உங்கள். இந்து. நாளிதழ். தமிழ்ச் சூழலில் கடந்த ஐந்தாண்டுகளில் நாம் மேற்கொண்ட முன்முயற்சிகளின் உச்சம் ஐந்தாம் ஆண்டில் நிகழ்ந்தது.  எந்தவொரு பத்திரிக்கையும் செய்யத் தயங்கும் பெயர் மாற்றத்திற்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டது நம்முடைய நாளிதழ்.  "தி இந்து" உங்களுடைய தொடர் வேண்டுகோளின் தொடர்ச்சியாக. "இந்து தமிழ் திசை" ஆனது.  அதை இரு கரம் நீட்டி உற்சாகத்துடன் நீங்கள் வரவேற்றது, நம் நாளிதழ் மீது நீங்கள் கொண்டிருக்கும் நன்மதிப்புக்கான இன்னொரு உதாரணம்.

வயது, வாசகர்கள் எண்ணிக்கை ஏற ஏற பொறுப்பும் மேலும் மேலும் கூடுகிறது என்பதை உணர்ந்தே இருக்கிறோம். ஆறாம்  ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நாளில்  முதல் நாள் அன்று நாம் தீர்மானித்துக் கொண்ட  இலக்குகள், விதித்துக் கொண்ட கட்டுப்பாட்டுகள், எடுத்துக் கொண்ட உறுதி மொழிகள், யாவற்றோடும் வரவிருக்கும்  காலத்தின் சவால்களையும் எண்ணிப் பார்க்கிறோம். இதோ இன்று எங்களை  இன்னும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்கிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் கூடுதல்  கவனம் செலுத்தி -- செய்திகள் -- கட்டுரைகள் -- நிகழ்வுகள் -- வாயிலாக அந்த ஆண்டு நெடுக்கிலும் அது குறித்த முழுமையான அறிதலையும், புரிதலையும் வாசகர் மத்தியில் உறுவாக்குவது. இந்து தமிழ்   கடைபிடித்து வரும் செயல்திட்டம்.

=========

அந்த வரிசையில்,  அண்மைக்காலமாக நம்மையெல்லாம் மிரட்டிக் கொண்டிருக்கும் ஒரு மிகப் பெரிய ஆபத்தை எதிர்கொள்ளதர்கான முயற்சியைக் கையில் எடுக்கிறோம். அளவற்ற, கட்டுப்பாடு அற்ற இணைய பயன்பாடு;  செல்பேசி கலாச்சாரம் தான் அது! 

 "உலகை மேம்படுத்தவும் மேலும் வசதியாக்கவுமே தொழில்நுட்பம். ஆனால், கருவிகளை நாம் கையாள்வதற்கு பதிலாக, பழக்கத்தின் போக்கில் கருவிகள் நம்மைக் கையாளத் தொடங்கினால் ..?  

வரங்களே சாபமாக மாறுவது தான் மிஞ்சும்.

ஏற்கனவே இது தொடங்கிவிட்டது.
குடும்பங்கள் இன்று பிளக்கின்றன. ஆளுக்கொரு செல்பேசியுடன், வீட்டுக்குள்ளேயே ஒவ்வொரு மனிதரும் தனித்தனி தீவுகளாக மாறி வருகின்றனர். சேர்தார்போல அரை மணி நேரம் ஒரு விஷயத்தை  வாசிப்பது, ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்பது, ஓர் உறையைக் கேட்பது என்கிற தொடர் கவனிப்புப் பண்பு மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்து விட்டது. 


பரபரப்புக்கு ஏங்கும் மனங்கள், போலிச்  செய்திகளை நாடுகின்றன. வதந்திகளையே அதிகம் நம்பவும் விவாதிக்கவும் விரும்புகின்றன. வக்கிரங்களைப் பரப்ப விழைகின்றன. 

இதிலிருந்து எல்லாம் தற்காத்துக் கொள்வதற்கான வழிகளில் இந்த ஆண்டு நம் தனி கவனத்தை செலுத்த இருக்கிறோம்.


***   ***   ***

கே.அசோகன்
ஆசிரியர்

நன்றி :
தமிழ் திசை ~16.09.2018 (ஞாயிறு)


Re-typed in Tamil and circulated for the welfare of the society by

Ezhilarasan Venkatachalam
Tamil based English Trainer, Salem.

=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=
Thanks to

My HCMS78 friends : Manohar, Asgari, Prakash, Shabbir, Sabarinathan and Radhakrishnan

Who have been constantly supporting me and had enabled me to do good. INDEBTED TO THEM and other HCMS78 guys too.

##-##-##-##-##-##-##-
Translation of my INTRODUCTION  to above script in Tamil, for those who don't know Tamil.

Friends,

Title :   "Smartphones are CAPTURING OUR LIVES. And how to safeguard ourselves from the danger"

Tamil newspaper THE HINDU or "HINDU TAMIL THISAI" resolved on 16-09-2018 (Sunday) that for one full year they are going to focus on the subject :  "Smartphones are CAPTURING OUR LIVES and how to safeguard ourselves from the danger"

Glad that a giant, my favourite Tamil newspaper  "Hindu Tamil Thisai" had  "stolen" my agenda.

I HAD TYPED IT METICULOUSLY
FOR THE BENEFIT OF ALL. 

READ, RELISH, SHARE.

Soon you can see the English translation of the above matter in my blog

http://e3translation.blogspot.com

-
THANKS To  
.
..
BIRDS EYE VIEW


EZHILARASAN Venkatachalam
Tamil based English Trainer,
Salem, South India.



Comments

Popular posts from this blog

Translation - Just Smiling In the Mirror daily in good - Venkatachalam Salem

Daily even smiling at ourself is good. தினமும் நம் முகத்தை பார்த்து, நமக்கு நாமே சிரித்துக் கொண்டால் கூட நல்லதாம்.  We often think of a smile as a natural response to feel good emotions. /  நல்ல உணர்ச்சிகளை வெளிக்காட்ட அல்லது உணர  புன்னகையை இயற்கையான பதிலாக நாம்  நினைக்கின்றோம். But did you know that smiling – even if that smile is fake – can boost your mood and reduce stress? /  ஆனால் புன்னகை -- அந்த புன்னகை போலியானதாக இருந்தாலும் -- உங்கள் மனநிலையை அதிகரிக்கவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? Just Smile In the Mirror daily. /  தினமும் கண்ணாடியில் உங்கள் முகத்தை பார்த்து சிரிக்கவும். Research found that a big smile that involves facial muscle activity around the eyes can produce a change in brain activity and mood. /  கண்களைச் சுற்றியுள்ள முகத் தசைச் செயல்பாட்டை உள்ளடக்கிய ஒரு பெரிய புன்னகை, நம் மூளை செயல்பாட்டில் மற்றும் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. All this research points to one simple but wonderful conclusion:

10 Simple tips to reduce stress sandwich Ezhilarasan health tips

10 SIMPLE TIPS TO REDUCE YOUR STRESS LEVELS (sandwich)  ..  Friends,   Follow these 10 simple tips to help manage and REDUCE YOUR STRESS LEVELS (Translation sandwiched version 02) BIRDS EYE VIEW of Ezhilarasan VENKATACHALAM's works .. உங்கள் மன அழுத்த அளவை சமாளிக்கவும் குறைக்கவும் உதவும்  இந்த 10 எளிய உதவிக் குறிப்புகளைப் பின்பற்றவும். 1. Avoid Caffeine, Alcohol, and Nicotine. ... காஃபின், ஆல்கஹால் (மது) மற்றும் நிகோடின் (சிகரெட்) ஆகியவற்றை தவிர்க்கவும். Avoid, or at least reduce, your consumption of nicotine and any drinks containing caffeine and alcohol. Caffeine and nicotine are stimulants and so will increase your level of stress rather than reduce it.  ... உங்கள் நிகோடின் நுகர்வு மற்றும் காஃபின் மற்றும் ஆல்கஹால் கொண்ட எந்த பானத்தையும் தவிர்க்கவும், அல்லது குறைந்தபட்சம் குறைக்கவும்.   காஃபின் மற்றும் நிகோடின் ஆகியவை உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். 2. Indulge in Physical Activity உடல் செயல்பாடுகளில் ஈடுபடுதல் எக்சசைஸ் செய்யுங்கள். Stressful situations increase t

THEN WE IMPORTED VACCINES - NOW WE EXPORT

  " Then we imported, now we were exporting". அப்போது வாங்கினோம் இப்போது கொடுக்கிறோம் DELHI. In the year 1947 when India got independence, lakhs of people were affected by Malaria. / புதுடெல்லி. கடந்த 1947-ம் ஆண்டில் இந்தியா விடுதலை பெற்றபோது லட்சக்கணக்கானோர் மலேரி யாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். Then the Red Cross of Canada sent the medicine Pencillin in 93 boxes to India./   அப்போது கனடாவைச் சேர்ந்த  செஞ்சிலுவை சங்கம் சார்பில் இந்தியாவுக்கு 93 பெட்டிகளில் பென்சிலின் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன. It reached Delhi on October 17,1947 in an aeroplane.  கனடாவில் இருந்து விமானத்தில் அனுப்பப்பட்ட பென்சிலின் மருந்துகள்  கடந்த 1947-ம் ஆண்டு அக்டோபர் 17-ம்தேதி டெல்லி வந்தடைந்தன.  Ms. Rajkumari Amirth Guar, the then Health Minister received it.  அந்த மருந்துகளை அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் ராஜ்குமாரி அம்ரித் கவுர் பெற்றுக் கொண்டார். Due to corona pandemic, the European medicine manufacturing factories are struggling to produce enough corona vaccines. இப்போது கரோனா வைரஸ் காலகட